Sunday, 14 July 2013

புன்னகை

உயிரை கையில் 
ஏந்துகிறாய் 
என் வாழ்க்கையில் 
ஒளியாய் வீசுகிறாய் 

உன் புன்னகை ஒன்றே 
போதுமடி 
என் வாழ்க்கையில் 
நீ தான் எல்லையடி... 

காலம் முழுக்க 
காத்திருப்பேன் என் 
காதலிலே நீ 
பூத்துவிட்டாய்.. 

பட்டாம்பூச்சி பார்த்திட 
வேண்டும் 
உன் புன்னகை கண்டு 
ஓடிட வேண்டும் 

உன் கையை பிடித்து 
வாழ்ந்திட வேண்டும் 
வாழ்ந்தது போக 
செத்திட வேண்டும் 

இந்த வாழ்க்கை 
ஒன்றே போதுமடி 
எந்த ஜென்மத்திலும் 
நீ தான் 
என் வாழ்க்கையடி...

No comments :

Post a Comment